தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் இனி ஒரு ஜிபி டேட்டா விலை 35 ஆக உயரும் அடுத்து டெலிகாம் பஞ்சாயத்தை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்
வோடபோன் மற்றும் ஐடியா அதன் டேட்டாக்களை சுமார் 7 மடங்கு விலை உயர்த்த திட்டமிட்டுள்ளது அதன்படி ஒரு 1 ஜிபி விலை 35 என்கின்ற விகிதத்தில் வசூலிக்க வேண்டும் என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயிடம் கேட்டுள்ளது
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வோடபோன் மற்றும் ஐடியாவில் நிலுவைத் தொகையான 53 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்த மற்றும் வோடபோன் மற்றும் ஐடியா லாபத்தை ஈட்ட இந்த விலை உயர்வானது கண்டிப்பாக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது
வோடாபோன் ஐடியா இந்த இரண்டு நிறுவனங்களுமே இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் ஒரு ஜிபி க்கு 35 ரூபாய் ஆக இருக்கவேண்டும் மற்றும் மாதாந்திர கட்டணமாக 50 ரூபாய் ஆக இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது
நாம் இப்போது ஒரு ஜிபி டேட்டாவை 4 ரூபாய் முதல் 5 ரூபாய்க்கு மட்டுமே வாங்கி வருகின்றோம்
அதுமட்டுமில்லாமல் இப்போதைக்கு ஜியோ தவிர அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இன்டர்நெட் யுசேஜ் கட்டணத்தை வாங்குவதில்லை எந்த நெட்வொர்க் அழைப்புகளை மேற்கொண்டாலும் இலவசம் என்று சொல்லியுள்ளனர் அதற்கு நீங்கள் ஏதோ ஒரு பேக்கில் இருந்தால் மட்டும் போதும் ஆனால் அதை ஒரு நிமிடத்திற்கு 6 பைசா என நிர்ணயம் செய்ய வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் விரும்புகின்றது
அதுமட்டுமில்லாமல் வோடஃபோன் மற்றும் ஐடியாவின் பேக் விலை 50 சதவீதம் வரை உயர்த்திய மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஒரு அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்